தாராபுரத்தில் கைவரிசை காட்டிய மேலும் ஒரு டவுசர் கொள்ளையன் கைது

 

தாராபுரம், ஜூலை 13: தாராபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான குளத்துபாளையம், காளிபாளையம், ராஜா நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் பாத்திரங்கள் கொள்ளை போனது. இதில் முகமூடி அணிந்த டவுசர் கொள்ளையர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பிடிக்க எஸ்பி சாமிநான் உத்தரவிட்டார். தாராபுரம் டிஎஸ்பி கலையரசன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் கார்த்திக், வேலுமணி, கலைச்செல்வன் பாலசுப்பிரமணியன், ராமர், ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் 3 பிரிவுகளாக பிரிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

கொள்ளையில் ஈடுபட்ட தேனியை சேர்ந்த முருகேசன் (52), அர்ஜூனன் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து நகை. பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த தேனி மாவட்டம் குப்பியநாயக்கன்பட்டி தென்றல் நகரை சேர்ந்த ரமேஷ் (45) என்பவரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். இவருக்கு மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்கும், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் நிலுவையில் உள்ளது. சிசிடிவி கேமிரா காட்சிகள் மூலம் கொள்ளையர்களை பிடிக்க உதவியை சைபர் கிரைம் தலைமை காவலர் பாலுச்சாமி, சந்தானம் ஆகியோருக்கு போலீசார் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு