தாராபுரதில் திமுக மகளிர் உறுப்பினர் சேர்க்கை

 

தாராபுரம், ஆக.28: தாராபுரம் நகர திமுக சார்பில் மகளிர் உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் ஸ்ரீதர், உமா மகேஸ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆதி திராவிடர், பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு 29வது வார்டில் வீடு வீடாகச் சென்று பெண்களிடம் திமுக சாதனைகளையும், பெண்களுக்காக திமுக அரசு செய்து வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பற்றி எடுத்துரைத்து உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை மேற்கொண்டார்.நிகழ்ச்சியில், நகர துணைச்செயலாளர் பிலோமினா, தவச்செல்வன், கவுன்சிலர்கள் சீனிவாசன், முகமது யூசுப், சாஜிதா அகமது பாஷா, திமுக மகளிர் அணி சசிகலா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமுதவல்லி, அருக்காணி, ஐயப்பன், பவர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து