Tuesday, September 17, 2024
Home » தாயை பற்றி தரக்குறைவாக பேசியதால் வாலிபர் அடித்துக்கொலை: சிறுவன் உள்பட 7 பேர் கைது

தாயை பற்றி தரக்குறைவாக பேசியதால் வாலிபர் அடித்துக்கொலை: சிறுவன் உள்பட 7 பேர் கைது

by kannappan

சென்னை: தாயை பற்றி தரக்குறைவாக பேசிய வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த, சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிக்கரணை பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மகேஷ்‌ டோசர் (35) உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் தங்கி வேலை செய்து   வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், அங்கு பணிபுரிந்தவர்கள் மது வாங்கி வந்து குடித்தனர். அப்போது, மகேஷ் டோசர், மேடவாக்கம் பகுதியில் தங்கியுள்ள பிஷால் (20), அமர்பாஸ்கர் (21) ஆகிய சக தொழிலாளிகளை மது குடிக்க பள்ளிக்கரணை வரவழைத்துள்ளார். அவர்கள் ஒன்றாக சேர்ந்து மது குடித்தபோது போதை தலைக்கேறியதால், அவர்களுக்குள் வாய்த்தகராறு  ஏற்பட்டது. இதில் பிஷால், அமர்பாஸ்கர் ஆகியோரை மகேஷ் அடித்து துரத்தி உள்ளார். மேலும், பிஷாலின் தாயாரை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிஷால், அமர்பாஸ்கர் ஆகிய இவரும் மீண்டும் தன் நண்பர்களுடன் மேடவாக்கம் வந்து மகேஷ்‌ டோசரை உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி கீழே சரிந்தார். இதையடுத்து, அவர்கள்   தப்பி ஓடினர். இதைப் பார்த்த சக தொழிலாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த  மகேஷ்‌ டோசரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்ததார்.தகவலறிந்த, பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேஷ் டோசரின் சடலத்தை கைப்பற்றி,  பிரேத பரிசோதனைக்கு அதேமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மகேஷை டோசரை உருட்டுகட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு, மேடவாக்கம் பகுதியில் தலைமறைவாக இருந்த  பிஷால் (20), அமர்பாஸ்கர் (21), இவரது நண்பர்கள் மோண்டா பாஸ்கர் (18), கோன்கான் (32), ரேகல் ஹால்டர் (20), மனஜீத் (41) ஒரு சிறுவன் உள்பட 7 பேரை நேற்று கைது செய்தனர். …

You may also like

Leave a Comment

fifteen + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi