தாம்பரம் மேம்பாலம் அருகே பைக் ஷோரூமில் தீ விபத்து

தாம்பரம்: தாம்பரம் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் பிரபல இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது. இங்கு நேற்று காலை வழக்கம் போல ஷோரூமை திறந்து ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஷோரூமின் முதல் தளத்தில் திடீரென தீ பற்றி கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ஷோரூமில் இருந்து அலறியடித்தவாறு வெளியேறினர்.இச்சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் கடுமையாக போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த விபத்தில் 31 புதிய இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. மேலும் ஷோரூமில் இருந்த 5 கணினி, ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது.இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை