தாம்பரம்: தாம்பரம் தொகுதி அமமுக வேட்பாளர் கரிகாலன் நேற்று தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 1 மற்றும் 37வது வார்டுகளில் மக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் மக்களிடையே பேசுகையில், ‘நான் தாம்பரம் நகர மன்ற தலைவராக இருந்தபோது, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளேன். குறிப்பாக, தாம்பரம் பகுதியில் உள்ள பல பூங்காக்கள் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்பட்டு பெருமளவு முடிக்கப்பட்டது. தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 965 சாலைகள் அமைத்துள்ளேன். 8500 தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியுள்ளேன். தெருவுக்கு 2 சின்டெக்ஸ் தொட்டி அமைத்து குடிநீர் பஞ்சத்தை போக்கி உள்ளேன்.மேலும், இதுபோல் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தாம்பரம் தொகுதி முழுவதும் செய்திட, குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்றார். பிரசாரத்தின்போது, அமமுக செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன், தாம்பரம் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தேமுதிக தாம்பரம் நகர செயலாளர் செழியன், தேமுதிகவை சேர்ந்த சூரியதேவன், அமமுகவை சேர்ந்து ஜான்சன், அமமுக வட்ட செயலாளர் சிக்மா ரமேஷ், தேமுதிக வட்ட செயலாளர்கள் ஆட்டோ ராஜகோபால், இ.சங்கர் உட்பட அமமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்….
தாம்பரம் நகராட்சி பகுதிகளில் கரிகாலன் வாக்கு சேகரிப்பு
previous post