தாம்பரம் திமுக வேட்பாளர் காமராஜை ஆதரித்து எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பிரசாரம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரான தாம்பரம் நகர முன்னாள் துணை தலைவர் காமராஜை ஆதரித்து, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா நேற்று வார்டு முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எந்த நல்ல பணிகளும் நடைபெறவில்லை. எனவே, திமுகவுக்கு வாக்களித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க செய்தனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது.இந்த நல்லாட்சி தொடரவும், தாம்பரம் மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளவும், மக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்கவும், பாதாள சாக்கடை, சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றவும் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, வேட்பாளர் காமராஜை வெற்றிபெற செய்ய வேண்டும்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது திமுகவினர் பா.பாரதி, கோ.ராஜேந்திரன், பட்டுராஜா, கந்தசாமி, சீனா, ரமேஷ், பாஸ்கர், விக்கி (எ) யுவராஜ், பன்னீர்செல்வம், ஏழுமலை, சதீஷ், தனஞ்செயன், பாலா, கோபி, குருமணி, கணபதி, சுரேஷ், மைக்கேல், நியூட்டன், அரிகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியினர் ராஜேந்திரன், பாபு, கம்யூனிஸ்ட் கட்சியினர் ராஜன்மணி, சண்முகம், பாஸ்கர், மனிதநேய மக்கள் கட்சியினர் ஷாமுன், அக்பர் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…