Friday, July 12, 2024
Home » தாம்பத்ய வாழ்க்கைக்கு புது விளக்கம் கொடுத்து 8 கணவருடன் 11 குழந்தைகளை பெற்ற மாடல் அழகி: மேலும் நிறைய குழந்தைகளை பெற்றெடுக்க விருப்பம்

தாம்பத்ய வாழ்க்கைக்கு புது விளக்கம் கொடுத்து 8 கணவருடன் 11 குழந்தைகளை பெற்ற மாடல் அழகி: மேலும் நிறைய குழந்தைகளை பெற்றெடுக்க விருப்பம்

by kannappan

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஒருவர், எட்டு கணவருடன் 11 குழந்தைகளை பெற்றதாகவும் மேலும் நிறைய குழந்தைகளை பெற உள்ளதாகவும் பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் மெம்பிஸ் நகரைச் சேர்ந்த டிக்டாக் பிரபலமான ஃபை என்ற மாடல் அழகி, அவ்வப்போது சமூக ஊடகங்களில் வீடியோவை வெளியிட்டு கலக்கி வருவார். டிக்டாக்கில் இவரை 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். டாட்டூ பிரியரான இவர், தனது உடல் அழகை காட்டி ரசிகர்களை மகிழ்வித்து வருவார். அவ்வப்போது வேடிக்கையான வீடியோக்களையும் வெளியிடுவார். தற்போது அவர் தனது சொந்த வாழ்க்கை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளர். அந்த பதிவில், ‘பல தந்தைகளை கொண்ட தாய்களை சுற்றிலும் எப்போதும் சர்ச்சைகள் இருந்து கொண்டே உள்ளன. நான் 11 குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறேன். இந்த குழந்தைகளுக்கு 8 தந்தைகள் உள்ளனர். எனக்கு இதுபோன்று குழந்தைகளை பெற்றுக் கொள்வதில் சந்தோஷமாக இருக்கிறது. எப்படியென்றால், உங்களிடம் ஒரு பொருள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த ஒரு பொருளையும் உங்களிடம் இருந்து எடுத்துக் கொண்டால், உங்களிடம் பூஜ்ஜியம் தான் இருக்கும். அதே உங்களிடம் எட்டு பொருட்கள் இருந்து, அதிலிருந்து மூன்று பொருட்களை எடுத்துக் கொண்டால் கூட, உங்களிடம் இன்னும் ஐந்து பொருட்கள் இருக்கும். அதுபோன்று எனக்கு ஒரு குழந்தை மட்டும் இருந்து, அந்த குழந்தையின் தந்தையும் இறந்துவிட்டால் அல்லது பிரிந்து சென்றுவிட்டால் அந்த குழந்தை தந்தையற்றவராக இருப்பார். எனக்கு இப்போது 11 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 3 குழந்தைகளின் தந்தைகள் என்னை விட்டு சென்றுவிட்டால் கூட, என் குழந்தைகளுக்கு இன்னும் 5 தந்தைகள் இருப்பார்கள். என்னுடைய விளக்கம் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இன்னும் நான் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். எனது குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கக்கூடிய சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறேன். அரசாங்கத்திடமிருந்து நிதிப் பலன்களைப் பெறுவதற்காக நான் குழந்தைகளை பெறுவதாக கூறுகின்றனர். அதற்காக நான் குழந்தைகளை பெற்றெடுக்க வில்லை’ என்று கூறினார். இவர் தனது குழந்தைகளின் பெயரையோ, கணவர்களின் பெயரையோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

twenty + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi