தானிய தோசை

செய்முறை:கறுப்பு கொண்டை கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். ராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகிய வற்றை ஒன்றாகச் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதனுடன் கொண்டைக்கடலை சேர்த்துக் களைந்து தோசை மாவுப் பதத்துக்கு அரை தெடுக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து மூன்று மணி நேரம் புளிக்க விடவும். தோசைக் கல்லைக் காய வைத்து, மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.குறிப்பு:மாவைச் சிறிய ஊத்தப்பமாக ஊற்றி, மேலே வெங்காயம் தூவி சுட்டெடுக்கலாம்.  …

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்