தாட்கோ மூலம் எஸ்சி, எஸ்டி இனத்தினர் சிமென்ட் விற்பனை முகவராக விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், மே 4: திருவாரூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் சிமென்ட் விற்பனை முகவராக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட் விற்பனை முகவர் திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமானபொருட்கள் மூலம் விற்பனைசெய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்கவேண்டும். திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனிநபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மானியம் அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் ஷ்ஷ்ஷ்.tணீலீபீநீஷீ.நீஷீனீ < லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tணீலீபீநீஷீ.நீஷீனீ > என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவுசெய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் பைபாஸ் ரோட்டில் இயங்கி வரும் மாவட்டமேலாளர் அலுவலகத்தை நேரிலும் அல்லது 04366-250017 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். எனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்தஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பித்து மேற்குறிப்பிட்டுள்ள திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை