தொண்டி, ஜூலை 2: தொண்டி அருகே மங்களக்குடியில் தவ்ஹித் ஜமாத் சார்பில் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளையின் சார்பாக நேற்று மாவட்டச் செயலாளர் அல்பார் அமீன் தலைமையில் கூட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் முகம்மது ஆதில், மாவட்ட துணைத் தலைவர் செய்யது அபுதாகிர் முன்னிலையில், செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் மற்றும் பயான் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காரைக்கால் அஸாருதீன், யாசிர் அரஃபாத் பேசினர். அதனைத் தொடர்ந்து மக்தப் மதரஸா மாணவ,மாணவிகளின் பயான் நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. கிளைப் பொருளாளர் பாதுஷா, கிளை துணைத் தலைவர் அஷ்ரப் அலி, ஆண்கள்,பெண்கள், மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.