சேலம், ஜூலை 13: சேலம் ஓமலூர் பக்கமுள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் விமல்ராஜ்(28). இவரை ஆட்டையாம்பட்டி போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த விமல்ராஜ், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று விமல்ராஜை போலீசார் கைது செய்தனர். பினனர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.