தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

நெல்லை,ஆக.22: நாங்குநேரியில் கடந்த 2019ம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி வழக்கில் ஈடுபட்ட மஞ்சங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த நம்பிராஜன் (38) என்பவரை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. நாங்குநேரி போலீசார் அவரை பல இடங்களில் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி