தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

நெல்லை,நவ.21: நெல்லை மாவட்டம், நாங்குநேரி சரகம் ராதாபுரம் சமூகரெங்கபுரம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்(43). இவரை அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வந்தவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து நாங்குநேரி நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன்படி நாங்குநேரி போலீசார் முருகனை பல இடங்களில் தேடிவந்தனர். இதையடுத்து நேற்று அவரை போலீசார் கைது செய்து நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு