தலைமறைவாக இருந்த கூலித்தொழிலாளி சிக்கினார் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

ஆரணி, டிச.12: ஆரணியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி நேற்று போலீசில் சிக்கினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கொசப்பாளையம் குங்குலியர் தெருவை சேர்ந்தவர் ஜீவா(40), கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2012ம் ஆண்டு ஆரணியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிந்து ஜீவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு பிணையில் வெளியே வந்த ஜீவா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் வழக்கு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஜீவாவை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த ஜீவாவை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கணவன் மாயம்: மனைவி புகார்