Sunday, October 6, 2024
Home » தலைஞாயிறு பகுதியில் இளம் சம்பா பயிரை தாக்கும் மஞ்சள் நோய்-கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

தலைஞாயிறு பகுதியில் இளம் சம்பா பயிரை தாக்கும் மஞ்சள் நோய்-கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

by kannappan

வேதாரண்யம் : வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளதுதற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் சம்பா-தாளடி நெற்பயிர்கள் துத்தநாக சத்து பற்றாக்குறையினால் மஞ்சள் நிறமாக இலைகள் மாறி பழுத்து காணப்படுகிறது. மேலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் அதிக விளைச்சல் பெறுவதற்கு ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலான விவசாயிகளால் அளிக்கப்படுகிறது. மேலும் ரசாயன உரங்களில் பேரூட்ட சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர்.ஆனால் நுண்ணூட்டச் சத்துகளை அதிலும் குறிப்பாக சிங் சல்பட் எனப்படும் துத்தநாக சத்தினை பெரும்பாலான விவசாயிகள் அளிப்பதில்லை. நெல் விளைச்சலில் துத்தநாக சத்தின் பங்கானது மிகவும் முக்கியமானது ஆகும். நெல் பயிரில் பச்சையம் உருவாவது தொடங்கி பல்வேறு உயிர்வேதி விளைகளில் துத்தநாகம் உதவி புரிகிறது. துத்தநாகம் அளிக்க இயலாத சூழ்நிலையில் விளைச்சலில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். துத்தநாக சத்தின் குறைபாடு காணப்படுவதற்கான அதிக காரத்தன்மை கொண்ட மண்ணில் தொடர்ந்து வயலில் நீர் தேக்கி வைப்பது, பாசன நீரில் அதிக அளவு பைகார்பனேட் உப்பு அளவு இருத்தல் காரணம் ஆகும்.மேலும் அதிக அளவு மணிச்சத்து உரங்களை வயலில் இடுதல், தழைச்சத்து உரமாக தொடர்ந்து யூரியா பயன்படுத்தப்படுவது. தொடர்ந்து நெற்பயிரையே சாகுபடி செய்வதால் மண்ணிலுள்ள துத்தநாக சத்தினை பயிர்கள் எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பற்றாக்குறை மற்றும் களர் நிலங்கள், மணிச்சத்து அதிகமாக உள்ள நிலங்கள், சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள மண் ஆகிய நிலங்களில் துத்தநாக சத்து பயிர்களுக்கு கிடைப்பதில்லை.இந்த பற்றாக்குறையின் அறிகுறிகள் நெல் நடவு செய்த இரண்டு முதல் 4 வாரங்களுக்குள் தென்படும். பாதிக்கப்பட்ட நெற்பயிரின் இளம் இலைகளின் மைய நரம்பில் வெள்ளை நிறக் கோடுகள் தோன்றும்.பின்னர், பழுப்பு நிறக்கோடுகளாக மாறிவிடும். இதனால் பயிர்களின் வளர்ச்சி குன்றிமஞ்சல் நிறமாக காணப்படும்.இதை சரிசெய்ய ஒரு ஏக்கருக்கு 10 கிலோ சிங் சல்பேட் உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும். அல்லது ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்ட உரத்தினை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும். நெல் நுண்ணூட்ட உரம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாகவும் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை விவசாயிகள் பெற்று பயன் அடையலாம். என தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்….

You may also like

Leave a Comment

10 + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi