தலித் சிறுவனை தாக்கி கொடூரம்

ரேபரேலி: உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலியில் 2 நிமிடம் 30 விநாடிகள் ஓடும் வீடியோ ஒன்று வைரலானது. இந்த வீடியோவில், பைக்கில் அமர்ந்திருக்கும் ஒரு வாலிபரின் கால்களை மிகுந்த பயத்துடன் நாக்கல் சிறுவன் நக்குகின்றான். இதைப் பார்த்து சுற்றி நின்றுள்ள வாலிபர்கள் கேலி செய்து சிரிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த சம்பவம் கடந்த 10ம் தேதி நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் ஜகத்பூரை சேர்ந்தவன். தனது விதவை  தாய் மற்றும் 2 சகோதரியுடன்  வசித்து வருகின்றான். பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனை அவனது நண்பர் மோட்டார் சைக்கிளில் சலோன் சாலை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று, அங்கு வைத்து சிறுவனை தாக்கி இதுபோன்று செயலில் ஈடுபட வைத்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் தாய், குற்றம்சாட்டப்பட்ட சிலரின் வயல்களில் வேலை செய்ததாகவும், அந்த பணத்தை கேட்டதற்காக சிறுவனை இதுபோன்று கொடூமை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடபாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். …

Related posts

திருச்சி ஏர்போர்ட் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏட்டுவை வெட்டி தப்ப முயன்றபோது அதிரடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை: 4 பேர் கைது