தற்காலிக பட்டாசு கடை அக்.19க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

 

விருதுநகர், அக். 9: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல்: மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் நிபந்தைகளின் படி விண்ணப்பங்களை அனைத்து அரசு இ-சேவை மையங்கள் மூலம் இணையவழியில் https://www.tnesevai.tn.gov.in முகவரியில் அக்.19க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கட்டிட வரைபடங்கள், நிலத்தின் உரிமைக்கான ஆவணம் பட்டா, பத்திர நகல், வாடகை ஒப்பந்த பத்திரம் அசல், உரிமக் கட்டணம் அரசு கணக்கில் செலுத்திய சீட்டு, பான்கார்டு, ஆதார் கார்டு, ரேசன்கார்டு, ஊராட்சி, நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-2. விதிமுறைகளின் படி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து, தகுதியான மனுதாரர்களுக்கு 30 நாட்களுக்கு மட்டும் செல்லத்தக்க தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும்.

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு