தர்மபுரி மாவட்டத்தில் 3 டூவீலர்கள் திருட்டு

தர்மபுரி, ஜன.6: காரிமங்கலம் பூனாதனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்(52). இவர் தர்மபுரி நான்கு ேராட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் சூபர்வைசராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாணிக்கம் கடையின் முன்பு தனது டூவீலரை நிறுத்தி இருந்தார். இரவு பணியை முடிந்து வீட்டுக்கு செல்ல டூவீலரை எடுக்க வந்த போது டூவீலர் திருடு போயிருந்தது. இதேபோல், தர்மபுரி மதிகோண்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம்(40). இவர் பீரோ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு, சிவலிங்கம் வீட்டின் முன் டூவீலரை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, டூவீலரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகார்களின் பேரில், தர்மபுரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாப்பாரப்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60), கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் பாப்பாரப்பட்டியில் இருந்து டூவீலரில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென அவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் வந்துள்ளது. இதையடுத்து அவர் ரோட்டோர மரத்தடியில் டூவீலரை நிறுத்தி விட்டு சற்று இளைப்பாறி உள்ளார். பின்னர் எழுந்து பார்த்த போது, டூவீலர் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்