தரம் உயர்த்தப்பட்ட ஓசூர்சிப்காட் தீயணைப்பு நிலையம்

ஓசூர், ஏப்.11: ஓசூர் மாநகராட்சியில் ₹5.30 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய கோட்ட அலுவலக கட்டிடம் மற்றும் சிப்காட்டில் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மீட்பு பணி நிலையம் ஆகியவற்றை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய கோட்ட அலுவலக கட்டிட வளாகத்தில் குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்ச்சிக்கு மேயர் சத்யா, கமிஷனர் சினேகா, சப் கலெக்டர் சரண்யா, ஓசூர் வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், ‘தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில், ஓசூர் வீட்டுவசதி பிரிவு, வீட்டு வசதி வாரிய கோட்ட அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, கலந்தாய்வு அரங்கு, கணினி பிரிவு, பதிவறை, உணவருந்தும் அறை, மழைநீர் சேகரிப்பு, கண்காணிப்பு கேமரா வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், கூடுதலாக ஒரு வாகனம் மற்றும் 12 வீரர்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் கிடைக்கும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் மாது, மாநகராட்சி உறுப்பினர்கள் வெங்கடேஷ், அருள் பெருமாயி, வீட்டுவசதி வாரிய உதவி செயற் பொறியாளர் சுதீர், உதவி பொறியாளர் செந்தமிழ்செல்வி, தாசில்தார் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை