தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் தூக்கிட்டு தற்கொலை களக்காடு அருகே பரபரப்பு

களக்காடு, செப். 22: களக்காடு அருகே தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மூங்கிலடி வெப்பல் மேலத்தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (44). தொழிலாளியான இவருக்கும், இவரது தந்தை அல்போன்ஸ், தம்பி செல்வகுமாருக்கும் இடப்பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 16ம் தேதி அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஸ்டீபன்ராஜ், தம்பி செல்வகுமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து களக்காடு போலீசில் செல்வகுமார் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஸ்டீபன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இதனைதொடர்ந்து ஸ்டீபன்ராஜ் தலைமறைவானார். இந்நிலையில் நேற்று அவர் மூங்கிலடி குளக்கரையில் உள்ள அத்திமரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து களக்காடு இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட ஸ்டீபன்ராஜ்க்கு இன்பராணி (33) என்ற மனைவியும் ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை