தம்பதி தற்கொலை

நெல்லை: நெல்லையை அடுத்த பழவூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (45). ரைஸ்மில் நடத்தி வந்தார். விவசாய பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். இவரது மனைவி ராதிகா (37). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. நேற்று காலை வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து இவர்கள் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆறுமுகம் வீட்டின் உத்திரத்தில் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி கட்டிலில் இறந்த நிலையிலும் கிடந்தது தெரிய வந்தது. முதற்கட்ட விசாரணையில், குழந்தை இல்லாத விரக்தியில் தம்பதியினர் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்….

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்