தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாணவர்களுக்கான பேச்சு போட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது.இதில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சீ.சந்தானலட்சுமி தலைமை வகித்தார். கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியை சேர்ந்த மாணவன் ரா.முனீசுவரன் முதல் பரிசுத்தொகை ரூ5 ஆயிரம், பட்டாபிராம் தருமமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவன் மு.தமிழ்செல்வன் 2ம் பரிசுத்தொகையாக ரூ3 ஆயிரம், திருப்பாச்சூர் திருமுருகன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவி பா.அபிராமி 3ம் பரிசுத்தொகையாக ரூ2 ஆயிரத்துக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.வெற்றிப்பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் மாவட்ட ஆட்சியரால் பின்னர் வழங்கப்படும். இப்போட்டியில் திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து 24 மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்