தமிழ் மாநில காங்கிரஸ் ஊழியர் கூட்டம்

சேலம், ஜூலை 3: அயோத்தியாப்பட்டணத்தில் சேலம் புறநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட தமாகா தலைவர் வக்கீல் செல்வம் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், கிழக்கு மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மாநில இணை செயலாளர் சின்னதுரை, புறநகர் மாவட்ட துணை தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அயோத்தியாபட்டணம் பேரூராட்சி தலைவர் தேவராஜ் வரவேற்றார். கூட்டத்தில் தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். முன்னதாக காமராஜர், மூப்பனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் வரும் 14ம் தேதி திருச்சியில் தமாகா தலைவர் வாசன் எம்பி தலைமையில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்டத்தில் இருந்து திரளாக பங்கேற்பது, 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் விழாவை சேலம் புறநகர் மாவட்ட தமாகா சார்பில், அனைத்து வட்டார, நகர, பேரூராட்சி பகுதிகளிலும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பள்ளி குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் நல்லதம்பி, மாவட்ட செயலாளர்கள் வீராணம் கிருஷ்ணன், எல்ஐசி நாகராஜ், முனுசாமி, வாழப்பாடி நகர தலைவர் ஷாஜகான், இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் ரகு நந்தகுமார், புறநகர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் லட்சுமி காந்தன், மாணவரணி மாவட்ட தலைவர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் வாசுதேவன், முருகன், சீனிவாசன், ராமு, வடிவேலு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். வட்டார தலைவர் தனபால் நன்றி கூறினார்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்