தமிழ் கூடல் நிகழ்ச்சி

போச்சம்பள்ளி, ஜன.14: மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் ரவி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் சின்னதுரை தொகுத்து வழங்கினார். சொல்லரசு, தமிழ்அரசு, சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கு அறிய பல கருத்துகளை, தமிழ் கூடல் நிகழ்ச்சி வாயிலாக எடுத்துரைக்கப்பட்டது. ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்