நாகர்கோவில்: தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு இன்று (9ம் தேதி) முதல் ஹால்டிக்கெட் வழங்கப்பட உள்ளது. தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு வரும் அக்டோபர் 15ம் தேதி நடைபெற உள்ளது.தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்பட்டியலை தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 9ம் தேதி (இன்று) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை அக்டோபர் 9ம் தேதி (இன்று) பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு இன்று முதல் ஹால்டிக்கெட்
previous post