தமிழ்நாட்டுக்கு ரூ.35,208 கோடி முதலீட்டை ஈர்க்க 59 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து: 76,795 பேருக்கு வேலை வாய்ப்பு!!

கோவை : கோவையில் இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையில் புதிய திட்டங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.59 நிறுவனங்களுடன் ரூ.35,208 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 76,795 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது. ரூ.3,928 கோடியில் புதிய தொழிற்சாலைகளை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.13,413 கோடியில் 13 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் 11,681 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.அதன்படி, கோவை, செங்கல்பட்டு, விருதுநகரில் டால்மியா பாரத் கிரீன் விஷன் லிமிடெட் சார்பில் சிமெண்ட் தயாரிப்பு கம்பெனி, அதானி என்டர்பிரைசஸ் சார்பில் சென்னையில் தகவல் தரவு மையம், காஞ்சிபுரம், திருவள்ளூரில் தொழிற்பூங்கா, சென்னை, காஞ்சிபுரத்தில் தகவல் தரவு மையம், டிவிஎஸ் மோட்டார் சார்பில் கிருஷ்ணகிரியில் மின் வாகனங்கள் தயாரிப்பு, அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட் சார்பில் கரூர், தூத்துக்குடி, ராணிப்பேட்டையில் சிமெண்ட் உற்பத்தி ஆலை, பெருந்துறையில் மருத்துவ கையுறைகள், கோவையில் மின்சார ஸ்கூட்டர்கள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசியில் பல்நோக்கு மருத்துவமனை, ஈரோட்டில் பால் பொருட்கள், சிப்காட் பெருந்துறை மற்றும் திருப்பூரில் குழந்தைகளுக்கான துணிகள், சென்னையில் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் சார்பில் உணவு பொருட்கள், காஞ்சிபுரத்தில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மற்றும் காற்றாலை, மோட்டார் வாகனங்களுக்கான குளிர்பதன வசதி, ஆயத்த ஆடைகள் என 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.மேலும், ரூ.485 கோடி முதலீடு மற்றும் 1,960 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 7 வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அதன்படி மொத்தம் ரூ.35,208 கோடி முதலீட்டில் 76,795 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.அடுத்து, டிட்கோ நிறுவனம் தயாரித்துள்ள மாநிலத்தில் உள்ள வான்வெளி மற்றும் பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேடு ஒன்றினையும் முதல்வர் வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சியின்போது ரூ.13,413 கோடி முதலீட்டில் 11,681 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 13 திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.அதன்படி, காஞ்சிபுரத்தில் சூரிய ஒளி உற்பத்தி மற்றும் தகவல் தரவு மையம், சிப்காட் ஒரகடம் காஞ்சிபுரத்தில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், செங்கல்பட்டில் தகவல் தரவு மையம், திருநெல்வேலியில் உணவு பொருட்கள், காஞ்சிபுரத்தில் லித்தியம் அயன் மின்னேற்றுகள், திருநெல்வேலியில் பேப்பர் பொருட்கள், காஞ்சிபுரத்தில் காற்றாலை பிளேடு கியர்பாக்ஸ், நாமக்கல்லில் நூற்பு ஆலைகள், காஞ்சிபுரத்தில் டிரோன்கள், விருதுநகரில் நூற்பு ஆரோகள், காஞ்சிபுரத்தில் டயர் இயந்திரங்கள் உற்பத்தி, சிப்காட் ராணிப்பேட்டையில் ஏபிஐ உள்ளிட்ட 13 திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.அடுத்து, ரூ.3,928 கோடி முதலீட்டில் 3,944 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 10 திட்டங்களின் வணிக உற்பத்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேற்கூறிய 82 திட்டங்களின் மூலம் ரூ.52,549 கோடி முதலீட்டில் 92,420 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிட வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவு திட்ட உரையில் அறிவித்தபடி, முதலீடுகளை பெருமளவில் ஈர்த்திடும் வகையில், ”தமிழ்நாடு நிதிநுட்ப கொள்கை 2021”ஐ முதல்வர் வெளியிட்டார். அதேபோன்று, மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 வின் கைபேசி செயலியை துவக்கி வைத்தார்….

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை