Tuesday, July 2, 2024
Home » தமிழ்நாட்டில் உள்ள 149 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல்

தமிழ்நாட்டில் உள்ள 149 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல்

by kannappan

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (07.06.2022) புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவில் வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது.  தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்த மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் (கிராமப்புற திருப்பணி), அருள்மிகு பிடாரி அம்மன் திருக்கோயில், திருவாரூர்  மாவட்டம் நன்னிலம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இடம்பாவனம், அருள்மிகு சற்குணநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம், அருள்மிகு திருமூலநாத சுவாமி திருக்கோயில், செம்மங்குடி, அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், தென்காசி மாவட்டம், அருள்மிகு வடகாசியம்மன் திருக்கோயில், தாருகாபுரம், அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருள்மிகு பொய்சொல்லா மெய்யன் சாஸ்தா திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம், அருள்மிகு நாராயண சுவாமி திருக்கோயில், அருள்மிகு முப்பிடாரி அம்மன் திருக்கோயில், கோவை மாவட்டம், பீளமேடுபுதூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பேரூர் வெங்டேசப்பெருமாள் திருக்கோயில், வேலூர், அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் திருக்கோயில், அருள்மிகு இரண கங்கை அம்மன் திருக்கோயில், சென்னை ஓட்டேரி, அருள்மிகு அனுமந்தராயர் எனும் ஆஞ்சநேயர் திருக்கோயில், சூளை, அருள்மிகு வேம்புலியம்மன் திருக்கோயில், வால்டாக்ஸ், அருள்மிகு கற்பக சுந்தர விநாயகர் திருக்கோயில், ஆலந்தூர், அருள்மிகு ஆர்டிலரி தர்மராஜா திருக்கோயில், காஞ்சிபுரம் அருள்மிகு பாலீஸ்வரர் திருக்கோயில், அய்யம்பேட்டை அருள்மிகு சக்தி மாரியம்மன் திருக்கோயில் உட்பட 149 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இத்திருக்கோயில்களில் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரைகளுக்கு பின்பு திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும்.தமிழ்நாட்டில் 1000 மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு புராதான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து  பராமரித்தல் பொருட்டு புனரமைப்பு பணிக்கான மதிப்பீட்டினை பரிசீலித்து அதன்பின்பு திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. …

You may also like

Leave a Comment

ten − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi