தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 24,418 பேருக்கு கொரோனா உறுதி; 27,885 பேர் டிஸ்சார்ஜ்; 46 பேர் உயிரிழப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,03,702 ஆக உயர்வு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 26,533 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று 24,418 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் முன்பு இருந்ததை விட தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33,03,702 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 27,885 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மொத்தமாக இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 30,57,846 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்று, ஒரேநாளில் கொரோனாவுக்கு 46 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,506 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,40,979 மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,08,350 ஆக உள்ளது….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு