தமிழ்நாடு அறிவியல் இயக்க ஜெயங்கொண்டம் ஒன்றிய கிளை துவக்க விழா

 

ஜெயங்கொண்டம், டிச.27: அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஜெயங்கொண்டம் ஒன்றிய கிளை துவக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி பழனியப்பன் தலைமை வகித்தார். ஆசிரியர் சாமிநாதன் வரவேற்றார். ஞானசேகரன் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் உஷா, சண்முகம் அருண் கார்த்திக், தமிழ்ச்செல்வன் ஆகியோர் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் அறிவியல் இயக்கத்தை வலுப்படுத்துதல் பற்றி வாழ்த்தி பேசினர்.

வானவில் மன்ற நிர்வாகி கவுசல்யா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவராக பிரபாகரன், செயலாளராக அருள்ஜோதி, பொருளாளராக அன்பு ரோஜா, இணைச் செயலாளராக கௌசல்யா, ஒன்றிய துணைத் தலைவராக குருநாதன், ஆகியோர் புதிய பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர். புதிய பொறுப்பாளர்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்