தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: மணலில் ஒவியம் அமைத்து அசத்திய ஆந்திரா இளைஞர்

ஆந்திரா: மத நல்லிணக்கத்தோடு சமூக சீர்திருத்த ஆட்சியை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையையொட்டி நெல்லூர் இளைஞர் ஒருவர் மணலில் சிற்பம் வரைந்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், செல்லக்கூறு  மண்டலம், ஏரூறு கிராமத்தை சேர்ந்த மன்ச்சால சனத்குமார் எனும் இளைஞர் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மணல் சிற்பம் அமைத்து அதில் ஹாப்பி பர்த்டே எம்.கே. ஸ்டாலின் சார் என்று எழுதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சனத்குமார் கூறுகையில் தமிழகத்தில் மத நல்லிணக்கத்தோடு சமூக சீர்திருத்த ஆட்சியை மேற்கொண்டு வரும்  ஸ்டாலின் அவர்கள் மேலும் நூறு ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி புரிய நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு இந்த மணல் சிற்பத்தை அவருக்கு பிறந்தநாள் பரிசாக அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்….

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்