தமிழக முதல்வர் சென்னை திரும்பினார்

 

அவனியாபுரம், ஆக. 19: தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 நாள் பயணத்தை முடித்து விட்டு நேற்றிரவு 6.40 மணியளவில் விமானம் மூலம் மதுரையிலிருந்து சென்னை திரும்பினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன் பொன்முடி, கணேசன், மூர்த்தி சென்னை சென்றனர். முன்னதாக முதல்வரை, விமான நிலையத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், அனிதா ராதகிருஷ்ணன் ராஜகண்ணப்பன், மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், தென் மண்டல ஐஜி சுரேந்திரன் நாயர், காவல் ஆணையாளர் லோகநாதன் மற்றும் திமுகவினர் வழியனுப்பி வைத்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்