தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்: மீன் பிடிக்கக்கூடாது என எச்சரிக்கை..!

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது பல ஆண்டுகளாக நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கடலோர பகுதியில் இருந்து நேற்றுகாலை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இதனையடுத்து, வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 20க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் படகில் ரோந்து பணியில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை பார்த்து இந்தப்பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து மீனவர்கள் அந்தப்பகுதியில் இருந்து மீன்பிடி வலைகளை சேகரித்துக்கொண்டு புறப்படும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில், மீனவர்களின் மீன்பிடி வலைகளை வெட்டி சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டி அடித்தனர். உயிருக்கு பயந்த மீனவர்கள் அங்கிருந்து படகுகளை ராமேசுவரம் கடலோரப் பகுதி நோக்கி செலுத்தினார்கள். அங்கு வந்த அவர்கள் நள்ளிரவில் மீன் பிடித்துக்கொண்டு இன்று காலையில் கரை திரும்பினர். இலங்கை கடற்படை விரட்டியடிப்பால் 50-க்கும் மேற்பட்ட படகுகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை மீன்பிடி வலைகள் மற்றும் சாதனங்கள் சேதமடைந்ததாகவும், இதனால் பல லட்ச ரூபாய் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். மேலும், இலங்கை கடற்படையின் தாக்குதலால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஏராளமான மீனவர்கள் முன்னதாகவே கரைக்கு திரும்பி விட்டனர். இதனால் மண்டபம் கடற்கரையில் இன்று காலை மீன்வரத்து குறைவாக காணப்பட்டது….

Related posts

கஞ்சா விற்றதாக வாலிபரை கைது செய்ய சென்ற போலீசாருடன் குடும்பத்தினர் மல்லுக்கட்டு

ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்