தமிழக சட்டமன்ற தேர்தலில் மண்பாண்ட தொழிலாளர்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பு மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளன. மக்கள் தேசிய கட்சியின் மாநில தலைவரும், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க தலைவரும், தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பின் தலைவருமான சேம.நாராயணன் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தேசிய கட்சி, தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பு, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கம் முழு ஆதரவை  தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்….

Related posts

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…

மகாவிஷ்ணு கைது விவகாரத்தில் சட்டம் கடமையை செய்துள்ளது: செல்வபெருந்தகை பேட்டி