தமிழக கவர்னரை நீக்க கோரி மதிமுகவினர் கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக் கோரி புதுக்கோட்டையில் மறுமலர்ச்சி திமுகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, மதிமுக மாவட்டச் செயலர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் ஆரோக்கியசாமி, மாவட்ட பொருளாளர் ராஜா ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக வடக்கு மாவட்ட செயலர் கே.கே. செல்லப்பாண்டியன் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் செங்கோடன், நகர திமுக செயலர் செந்தில் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்று கையெழுத்திட்டனர். தொடர்ந்து பொதுமக்களிடமும் கையெழுத்து பெறப்பட்டது. புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கையெழுத்துகளை பெறத் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை