தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக லெனின் பிரசாத் தேர்வு

சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக லெனின் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள ஹசன் மவுலானா எம்எல்ஏவின் பதவிக் காலம் முடிவடைந்து. இதைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இளைஞர் காங்கிரஸ் தேர்தலை பொறுத்தவரை இந்த முறை புது முயற்சியாக செல்போன் ஆப் மூலம் நடத்தப்பட்டது. அத்துடன் புதிய உறுப்பினர் சேர்க்கையும் இதன் மூலமே நடந்தது. அதாவது, புதிய உறுப்பினர்களாக சேருகிறவர்களும் ஆப் மூலம் மட்டுமே கட்சியில் இணைத்து கொள்ளப்பட்டனர். அவர்களும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் வகையில் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தேர்தலில் 8 லட்சம் பேர் வாக்களித்தனர். வாக்களித்தவர்களின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் 5.75 லட்சம் வாக்குகள் மட்டுமே உண்மையானது. மீதியுள்ளது போலியான வாக்குகள் என்று கண்டறியப்பட்டது. இந்த 5.75 லட்சம் வாக்குள் டெல்லியில் உள்ள இளைஞர் காங்கிரஸ் மூலம் எண்ணப்பட்டது. கடந்த ஒரு மாதமாக இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. தற்போது இளைஞர் காங்கிரசில் வெற்றி பெற்றவர்களுக்கான விவரங்களை அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைமைமை தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட லெனின் பிரசாத் 2,04947 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்டு அவருக்கு அடுத்ததாக வாக்குகள் பெற்ற 5 பேர் துணை தலைவர்களாக அறிவிக்கப்பட்டனர். அதில் துணை தலைவராக ஜோஸ்வா ஜெரால்ட், நவீன்குமார், நரேந்திர தேவ், மேனகா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை பொது செயலாளராக அஸ்வத்தாமன் வெற்றி பெற்றுள்ளார். இளைஞர் காங்கிரஸ் தலைவராக வெற்றி பெற்றுள்ள லெனின் பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை ஆதரவாளர் ஆவார். அதே போல துணை தலைவர் ஜோஸ்வா ஜெரால்ட் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர். மேலும் நவீன்குமார் மாணிக் தாகூர் ஆதவாளர். நரேந்திர தேவ் டாக்டர் செல்லக்குமாரின் ஆதரவாளர். …

Related posts

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு