தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் மூத்த வக்கீல்கள் நியமனம்

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராவதற்காக 2 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் மற்றும் 30 மூத்த வக்கீல்களையும் நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்பாக நடைபெறும் வழக்குகளில், தமிழக அரசு சார்பில் ஆஜராவதற்காக வி.கிருஷ்ணமூர்த்தி, அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். இதேபோல் தமிழக  அரசு தொடர்பான முக்கிய வழக்குகளில் ஆஜராக மூத்த வக்கீல்கள் நியமிக்கப்படுகிறார்கள்.தமிழக அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரத்தின் பரிந்துரையின் அடிப்படையில், அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தஹி, கோபால் சுப்பிரமணியன், ராஜீவ் தவான், ராகேஷ் திவாரி, விகாஷ் சிங், ரஞ்சித் குமார், துஷ்யந்த் தவே, சேகர் நாப்டே, ஆர்.வெங்கட்ரமணி, கே.வி.விஸ்வநாதன், வி.கிரி, விவேக் தங்கா, சித்தார்த் லுத்ரா, பி.எஸ்.பட்வாலியா, கற்பகவிநாயகம், ஜெய்தீப் குப்தா, ராஜு ராமச்சந்திரன், சஞ்சய் ஹெக்டே, பி.எஸ்.நரசிம்மா, எம்.எஸ்.கணேஷ், அர்ஜித் பிரசாத், கே.ராதாகிருஷ்ணனன், என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன், ஆர்.விடுதலை, மரிய அற்புதம், பிரான்சிஸ் ஜூலியன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜராவார்கள்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு