தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பிரசார கூட்டம்

மண்டபம், ஜூன் 20: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெரு முனை பிரசார கூட்டம் மண்டபம் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் நடந்தது. பேரூராட்சி சேர்மன் ராஜா தலைமை வகித்தார். மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர் கான், பேரூர் செயலாளர் அப்துல் ரஹ்மான் மரைக்காயர், துணை சேர்மன் நம்புராஜன், அவைத்தலைவர் வேலு.முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத் ராஜா வரவேற்றார். 2 ஆண்டு சாதனை குறித்து திமுக இலக்கிய அணி துணை செயலாளர் ஆடுதுறை உத்திராபதி பேசினார். நகர் துணை செயலாளர் களஞ்சியம், கவுன்சிலர்கள் பூவேந்திரன், சாதிக்பாட்ஷா, உமா மகேஸ்வரி சரவணன், சீதா லட்சுமி காளிமுத்து, புரவலர் சைவ.சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர். மாணவரணி நகர் துணை அமைப்பாளர் அரவிந்த் நன்றி கூறினார். மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ ஆலோசனைபடி, ஒருங்கிணைப்பாளர் சம்பத் ராஜா ஏற்பாடு செய்தார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை