தமிழக அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கொரோனா

சென்னை: தமிழக அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் மற்றும் சளி ெதால்லை இருந்தது. இதனால் நேற்று அவர் பரிசோனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது  உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் அவர் முழு நலமுடன் உள்ளதால், எம்எல்ஏ விடுதியிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவரது உதவியாளர்கள் மற்றும் தன்னை சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர்,  மதிவேந்தன் ஆகியோருக்கு கொரோனா இருப்பதால் அவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்