Thursday, July 4, 2024
Home » தமிழகம் முழுவதும் பயிற்சி முடித்த 84 டிஎஸ்பிக்களுக்கு புதிய பதவி: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

தமிழகம் முழுவதும் பயிற்சி முடித்த 84 டிஎஸ்பிக்களுக்கு புதிய பதவி: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

by kannappan

சென்னை: தமிழகம் முழுவதும் பயிற்சி முடித்த 84 டிஎஸ்பிக்கள், பல்வேறு மாவட்டங்களில் டிஎஸ்பி.க்களாக புதிதாக பணி நியமனம் செய்து காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று 87 பேர் டிஎஸ்பிக்களாக பணிநியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பயிற்சி பெற்று வந்தனர். அந்த வகையில், பயிற்சி பெற்று வந்த 87 டிஎஸ்பிக்களில், 3 டிஎஸ்பிக்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளனர். மீதமுள்ள 84 புதிய டிஎஸ்பிக்கள் தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட டிஎஸ்பிக்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக டிஎஸ்பிக்களாக பணியாற்றி வந்த அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் மட்டும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 83 டிஎஸ்பிக்கள் புதிதாக பதவியேற்றதால் அங்கு பணியாற்றிய டிஎஸ்பிக்கள் தற்போது டிஜிபி அலுவலக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு பிறப்பித்துள்ளார்.அதன் விவரம் வருமாறு: காஞ்சிபுரம் மாவட்ட டிஎஸ்பியாக பயிற்சியில் இருந்த மனிஷா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், செங்கல்பட்டு மாவட்ட பயிற்சி டிஎஸ்பியாக இருந்த ஸ்வேதா சேலம் மாவட்டம் வாழப்பாடி டிஎஸ்பியாகவும், காஞ்சிபுரம் மாவட்ட பயிற்சி டிஎஸ்பியாக இருந்த மனோஜ்குமார் நீலகிரி மாவட்டம் ஊட்டி டிஎஸ்பியாகவும், செங்கல்பட்டு மாவட்டம் பயிற்சி டிஎஸ்பியாக இருந்த வசந்தகுமார் மதுரை மாவட்டம் திருமங்கலம் டிஎஸ்பியாகவும், செங்கல்பட்டு மாவட்ட பயிற்சி டிஎஸ்பியாக இருந்த பாலகிருஷ்ணன் நாகப்பட்டினம் டிஎஸ்பியாகவும், திருவள்ளூர் மாவட்டம் பயிற்சி டிஎஸ்பியாக இருந்த தமிழரசி கிருஷ்ணகிரி டிஎஸ்பியாகவும், திருச்சி மாவட்டம் பயிற்சி டிஎஸ்பியாக இருந்த விக்னேஷ் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி டிஎஸ்பியாகவும், திருவாரூர் மாவட்டம் பயிற்சி டிஎஸ்பியாக இருந்த கல்பனா செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தரம் பயிற்சி டிஎஸ்பியாகவும், திருப்பத்தூர் மாவட்டம் பயிற்சி டிஎஸ்பியாக இருந்த கிரியாசக்தி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பியாகவும், தர்மபுரி மாவட்டம் பயிற்சி டிஎஸ்பியாக இருந்த மனோஜ்குமார் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி என தமிழகம் முழுவதும் பயிற்சி முடித்த 84 டிஎஸ்பிக்கள் மாவட்ட டிஎஸ்பிக்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்….

You may also like

Leave a Comment

20 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi