சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் 505 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். 49 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,15,489 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று உயிரிழப்பு ஏதுமில்லை. சென்னையில் நேற்று அதிகபட்சமாக 24 பேர், செங்கல்பட்டு 7 பேர், கோவை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், கடலூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற 29 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …