சென்னை: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும். இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 22 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். …