Wednesday, July 3, 2024
Home » தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை

by kannappan

சென்னை: நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாததால், இந்தாண்டு பொதுத்தேர்வை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்வதற்காக 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இன்று 10-ம் வகுப்பு மாணாவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை இன்று துவங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 4,60,247 மாணவிகள், 4,78,089 மாணவர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9,38,337 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுதேர்வு எழுத்தவுள்ளனர். புதுச்சேரியில் 8,272 மாணவிகளும், 8,530 மாணவர்களும் என மொத்தம் 16,802 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் 3,888, புதுவையில் 48 என மொத்தம் 3,936 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. மேலும், 30,765 தனித் தேர்வர்களும், 242 சிறைவாசிகளுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். முறைகேடுகளை தடுக்க 3,050 பறக்கும் படைகளும், 1,241 ஸ்டாண்டிங் ஸ்குவார்டு படைகளும் நியமிக்கப்பட்டுள்ளன.           …

You may also like

Leave a Comment

3 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi