தமிழகத்தில் மேலும் 698 பேருக்கு கொரோனா: 15 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழக மருத்துவம்  மற்றும்   மக்கள்   நல்வாழ்வுத்துறை நேற்று    வெளியிட்ட    அறிக்கை: தமிழகத்தில்   நேற்று    1,02,043 பேருக்கு கொரோனா    பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 698 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த  எண்ணிக்கை 27,33,346 ஆக உள்ளது.  நேற்று      கொரோனாவில் இருந்து 746 பேர்   குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26,88,888 ஆக  உயர்ந்துள்ளது. மேலும்,  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 15  பேர் நேற்று  உயிரிழந்தனர். அதன்படி கோவை, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், செங்கல்பட்டு, சென்னை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி  ஆகிய  மாவட்டங்களில் தலா ஒரு நபர் என 15 பேர்  உயிரிழந்துள்ளனர். இதுவரை     36,575 பேர்  உயிரிழந்துள்ளனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை