தமிழகத்தில் பாஜகவுக்கு திமுக சிம்ம சொப்பனம்: தஞ்சை பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தஞ்சை: தமிழகத்தில் பாஜகவுக்கு, திமுக சிம்ம சொப்பனமாக விளங்குகிறது என்று தஞ்சை பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலில் ேபாட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி  வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை தஞ்சையில் கல்லுக்குளம்,  நாஞ்சிக்கோட்டை ரோடு மற்றும் கீழவாசல் காமராஜர் சிலை அருகே மாநகராட்சியில்  51 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை  ஆதரித்து பிரசாரம் செய்தார்.  அப்போது அவர் பேசியதாவது:மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு முதல் 3 மாதம் கொரோனா, அடுத்தடுத்த மாதங்களில்  மழை, வெள்ளம் என மோசமான நிலை இருந்தது. இதை எல்லாம் முறியடித்து தமிழகத்தை  சிறந்த மாநிலமாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். தலைவர்  கலைஞரின் சொல்லுக்கேற்ப சொல்வதைதான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம்  என்பது போல தேர்தலில் அளித்த வாக்குறுதியை கடந்த 8 மாதங்களில்  பெரும்பான்மையாக நிறைவேற்றியுள்ளோம். 8 மாத ஆட்சியின் சாதனைகளை  வேட்பாளர்கள் கூறி வாக்கு சேகரியுங்கள். மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க  தயாராக உள்ளனர். நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி, பிரதமர் மோடியிடம் சவால்  விட்டுள்ளார். தமிழகத்தில் பாஜ காலூன்ற முடியாது என  கூறியுள்ளார். அந்த அளவுக்கு தமிழகத்தில் பாஜகவுக்கு, திமுக சிம்ம சொப்பனமாக  விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெல்ல பாடுபட வேண்டும்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

இணையதள சேவை பாதிப்பு இண்டிகோ விமானங்கள் தாமதம்

92வது விமானப்படை தினத்தையொட்டி சென்னையில் இன்று விமான சாகசம்: போக்குவரத்து மாற்றம்