சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து கொண்டுள்ளது. கனமழையாகவும், மிக கனமழையாகவும் அவ்வப்போது பெய்து வருகிறது. வடகடலோர மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீ-யை தாண்டி மழை பதிவாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீட்டரை தாண்டியுள்ளது.இந்த சூழ்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 20 செ.மீ மழையும், சோழவரத்தில் 15 செ.மீ, திருவள்ளூரில் 13 செ.மீ, பொன்னேரியில் 12 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 12 செ.மீ, காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் 12 செ.மீ, ஸ்ரீபெரும்புதூரில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.மாமல்லப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இன்று அதிகாலை வரை தலா 18 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இன்று அதிகாலை வரை திருக்கழுக்குன்றத்தில் 16.2 செ.மீ, மதுராந்தகத்தில் 15.4 செ.மீ , திருப்போரூரில் 10 செ.மீ என மழை பதிவாகியுள்ளது.அம்பத்தூரில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பெரம்பூர் 10 செ.மீ, அயனாவரத்தில் 10 செ.மீ, சென்னை டிஜிபி அலுவலகத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்று பிற்பகல் கனமழை பெய்த நிலையில் மாலை நேரத்தில் மழை குறைந்திருந்த நிலையில் இரவு நேரத்தில் பல இடங்களில் கனமழை பெய்துள்ளது….