சென்னை: தமிழகத்தில் நீர்வளத்துறை மூலம் அணை, ஏரிகள் புனரமைத்தல், தடுப்பணை, கதவணை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, கடந்தாண்டு நீர்வளத்துறைக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை கொண்டு நீர்வளத்துறை சார்பில் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் காவிரி, கல்லணை கால்வாயில் மறு கட்டுமான பணி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை, முக்கொம்பு கதவணை, மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தில் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடும் திட்டம், கரூரில் புதிய கதவணை, காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம், மேட்டூர் சரபங்கா நீரேற்றும் திட்டம், வெள்ள தடுப்பு திட்டம், தூண்டில் வளைவு மற்றும் கடலோர தடுப்பு சுவர் அமைக்கும் திட்டம், குடிமராமத்து, தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டங்களின் கீழ் நடக்கும் ஏரிகள் புனரமைப்பு பணிகளும், இதை தவிர்த்து தடுப்பணை, செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த நிலையில் வரும் 16ம் தேதி இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆய்வின் போது, பல்வேறு முக்கிய திட்டங்களின் கீழ் நடக்கும் பணிகள் குறித்தும், தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கும் வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்தும், புதிய திட்ட அறிக்கைகள், துறையில் உள்ள முக்கிய விவகாரங்கள், முக்கியமான சட்ட பிரச்னைகள் தொடர்பாகவும், நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் நிதி நிலைமைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. கூட்டத்தில் பவர்பாயின்ட் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த 7 விவகாரங்களை முன்வைத்து விளக்கம் அளிக்கப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள 200 தடுப்பணை, புதிய நீர் நிலைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …
தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கும் திட்டங்கள் குறித்து வரும் 16ல் ஆய்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது
previous post