Sunday, October 6, 2024
Home » தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது: மருத்துவமனையில் இருந்து ஒரேநாளில் 31,759 பேர் வீடு திரும்பினர்: சுகாதார துறை தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது: மருத்துவமனையில் இருந்து ஒரேநாளில் 31,759 பேர் வீடு திரும்பினர்: சுகாதார துறை தகவல்

by kannappan

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 31,759 பேர் ஒரே நாளில் குணமடைந்தனர். இதில், அதிகபட்சமாக சென்னையில் 5,327பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 31,759  பேர் குணமடைந்தனர். இதுவரை 17,06,298 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1,63,763 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 30,016 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று கோவையில் மட்டும் 3,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 31,759 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 17,06,298பேர் குணமடைந்துள்ளனர்.  இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,10,157ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 486 பேர் நேற்று உயிரிழந்தனர்.  இதையடுத்து மொத்தம் 23,261 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய மொத்த பாதிப்பில் அரியலூர்- 256, சென்னையில்- 2705 பேர், செங்கல்பட்டு- 1314, கோவை- 3692, கடலூர்- 590, தருமபுரி-356, திண்டுக்கல்- 352, ஈரோடு- 1743, கள்ளக்குறிச்சி- 347, காஞ்சிபுரம்- 711, கன்னியாகுமரி- 927, கரூர்- 527, கிருஷ்ணகிரி- 493, மதுரை- 828, நாகப்பட்டினம்- 613, நாமக்கல்- 897, நீலகிரி- 505, பெரம்பலூர்- 307, புதுக்கோட்டை- 343, ராமநாதபுரம்- 308, ராணிப்பேட்டை- 493, சேலம்- 1492, சிவகங்கை-198, தென்காசி- 370, தஞ்சாவூர்- 797, தேனி- 592, திருப்பத்தூர்- 434, திருவள்ளூர்- 1072, திருவண்ணாமலை- 686, திருவாரூர்- 563, தூத்துக்குடி- 691, நெல்லை- 416, திருப்பூர்- 1697, திருச்சி- 1099, வேலூர்- 423, விழுப்புரம்- 660, விருதுநகர்- 519 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 30,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தொற்று பாதிப்பு ஏற்பட்டு  சிகிச்சையில் இருப்பவர்கள் நலம்பெற்று வீடு திரும்புவதும், புதிதாக  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் மக்களிடத்தில்  நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நகரங்களில் பாதிப்பு அதிகம் அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை விட தொழில் நகரங்களில் புதிதாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதன்படி கோவை- 3692, சென்னை- 2705, ஈரோடு- 1743, திருப்பூர்- 1697, சேலம்- 1492,  செங்கல்பட்டு- 1314, திருச்சி- 1099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கோவைக்கு அருகில் இருக்கும் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, இந்தபகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி தொற்றை குறைக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது….

You may also like

Leave a Comment

13 + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi