தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாட்டு பணிகள் மும்முரம்!: மக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை கொடி அணிவகுப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்பட்டு பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, தென்காசி ஆகிய 9  மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்வதற்காக காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி தேர்தலில் 40 ஆயிரம் போலீசாரும், ஊர்காவல் படையினரும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நடமாடும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பரப்புரை வரும் 4ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைவதால் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். …

Related posts

BNY மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு!

மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசியதாக மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது திருவெற்றியூர் போலீசில் புகார்

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!