தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவையில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் வானிலை தகவல் அளித்துள்ளது. வடக்கு மற்றும் அதனையொட்டிய வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் வரும் 9ம் தேதி வரை, வரும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது….

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு