தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் குடிசை மாற்று வாரியம் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஜூலை மாத தொகுப்பில் மத்திய அரசு எழுபத்து ஒரு லட்சம் தடுப்பூசிகளை கொடுப்பதற்கு முன் வந்து இருப்பதாகவும் அதில் 10 லட்சம் தடுப்பூசிகள் தற்போது கிடைத்திருப்பதாகவும் கூறினார். இதுவரை செலுத்தியதிலேயே அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் 2.68 லட்சம் தடுப்பூசிகள் இருப்பதாகவும் இன்றைக்கு உள்ளவை மக்களுக்கு செலுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். நாளை மக்களுக்கு செலுத்துவதற்கு இன்று மாலைக்குள் அடுத்த தொகுப்பு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்